search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் புகார்"

    • முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.

    இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதால் மேற்படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
    • தொலை தூர கல்வி இயக்ககத்தின் இந்த போக்கால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தொலை தூரக்கல்வி மூலம் தமிழ்செல்வன், மதன்குமார், பிரகாஷ் குமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர்ந்தனர்.

    மூன்று ஆண்டுகள் படிப்பின் கடைசி ஆண்டான் 2022-ல் நடத்த வேண்டிய இறுதித்தேர்வானது கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டுள்ளது. மே மாதமே நடத்த வேண்டிய தேர்வானது காலதாமதமாக நடத்தப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக நிர்வாகம் தாமதமாக தேர்வை நடத்தியும் தற்போது வரை அதற்கான முடிவுகளை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தால் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அந்த மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அதற்கான டான்செட் 2022 தேர்வில் இந்த மாணவர்களில் ஒருவர் 97.81 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பி.காம். படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வராததால் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

    தற்போது அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ. படிக்க விண்ணப்பித்து உள்ளார். ஆனாலும் பி.காம். முடிவுகள் வராததால் கடந்த ஆகஸ்டு மாதமே ஆரம்பமான முதுகலை வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.

    இதனால் அந்த மாணவரின் ஓராண்டு காலம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் பல மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேற்படிப்பு படிக்க முடியாமல் உள்ள மாணவர்களின் நலன் கருதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • மாணவர்கள் வெளியில் ஓட்டல்களுக்கு சென்று பணம் கொடுத்து சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். விடுதி அறைகளின் பூட்டுகள் உடைந்து கிடக்கின்றன

    திருச்சி:

    திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதி அமைந்துள்ளது. இங்கு 80 மாணவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி உள்ளனர். இவர்கள் திருச்சியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேற்கண்ட விடுதியில் மாணவர்களுக்கு சீராக உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது பற்றி விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் கூறும்போது, இந்த விடுதியில் சீராக உணவு வழங்குவதில்லை.

    இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் வெளியில் ஓட்டல்களுக்கு சென்று பணம் கொடுத்து சாப்பிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். விடுதி அறைகளின் பூட்டுகள் உடைந்து கிடக்கின்றன. அறையில் வைக்கும் எந்த பொருளுக்கும் பாதுகாப்பு இல்லை.

    மேலும் சீரான எலக்ட்ரிக் வயரிங் செய்யப்படவில்லை. இதனால் எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் பயன்படுத்துவதால் ஷாக் அடித்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    கழிப்பிடங்கள் மற்றும் குளியலறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் குடிநீர் வசதிகளும் சீராக இல்லை.

    ஆகவே உடனே கலெக்டர் விடுதியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர்.

    ×